மதுரைக்கு மஹால் திருமலை நாயக்கர் அரண்மனை
மதுரைக்கு மஹால்
திருமலை நாயக்கர் அரண்மனை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது
‘திருமலை நாயக்கர் மஹால்’. இதன் உட்புறத் தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்து
இழுப்பது உயரமான, பருமனான தூண்கள்தான். தொட்டு, தடவிப் பார்த்துக்கொண்டே
இருக்கலாம். அவ்வளவு பிரமாண்டம்! தூண்களுக்கு மேற்புறம் யாழி உருவமும்,
மாடம் போன்ற தோற்றமும், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் அற்புதமாகச்
செதுக்கப்பட்டிருக்கின்றன.
நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலத்தில்,
கி.பி.1636ல் மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த மஹாலை ‘திருமலை
நாயக்கர் அரண்மனை’ என்றும் சொல்வார்கள். இன்றைக்கும் மன்னர் அமர்ந்த
சிம்மாசனம் காட்சிக்கு இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இரவில் இங்கே
காண்பிக்கப்படும் ‘ஒலி-ஒளி காட்சி’யில் மஹாலின் உட்புறத் தோற்றத்தைப்
பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி!
No comments:
Post a Comment