Sunday, 5 October 2014
தெரியுமா உங்களுக்கு? சின்னமலையின் சிறப்பம்சம்
ஏசுபெருமானின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வாழ்ந்த
இடம்தான் சைதாப்பேட்டை சின்னமலை. இயேசுவின் அருட்போதனைகளை பரப்புவதற்காக
அவரது சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணமானார்கள். அந்த வகையில் இந்தியா
நோக்கி பயணம் செய்தவர்தான் புனித தோமையார். இவர், கடல் வழி முழுமையாக
கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே கேரளா வழியாக சென்னைக்கு வந்து
சேர்ந்திருக்கிறார். ஏசுபெருமான் கூறிய பிரசங்கங்களைத் தொகுத்து நமக்கு
பைபிளாக வழங்கியது அந்த காலகட்டத்தில்தான். சைதாப்பேட்டை சின்னமலையில்
தங்கியிருந்த போது அவர் அமர்ந்து ஜெபம் செய்த பாறை, அதில் அவர்
செதுக்கிவைத்த சிலுவை, தாகம் எடுத்தபோது பாறையைப் பிளந்து அவரே
உருவாக்கியதாக கூறப்படும் நீரூற்று போன்றவை சின்னமலையின் சிறப்பாக
சொல்லப்படுகிறது. இதற்காகவே இதை காண்பதற்காக ஏராளமானோர் தினமும் இங்கு
வந்து செல்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment